nadarasa sritharan
My blogs
Blogs I follow
| Introduction | எல்லோருக்கும் மனதில் சில எண்ணங்கள் இருக்கும்.ஒவ்வொரு விடயத்திலும் சில கருத்துக்கள் இருக்கும்.அனுஷ்காவா தமன்னாவா சிறந்த நடிகை என்பது போன்ற அதிகம் சிக்கல் இல்லாத விடயங்களில் இருந்து ஒசாமாவை சுட்டு கொன்றதில் அமெரிக்கா செய்தது மனிதாபிமான சட்டங்களை மீறும் செயலா இல்லையா போன்ற அதிகம் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்புக்கள் முதல் சத்ய சாய் பாபா கடவுளின் அவதாரமா இல்லையா போன்ற சில விமர்சனங்களுக்கு அப்பால் பட்டதாகக் கருதப்படும் விஷயங்கள் வரை ஒவ்வொரு மனங்களிலும் ஓடும் சிந்தனைகளுக்கு பஞ்சம் இல்லை.கருத்துக்களுக்கு என்றைக்குமே தட்டுப்பாடு கிடையாது.இந்த வலைப்பூவில் இனி வரும் காலங்களில் இடம் பெறப் போகின்றவை என்னுடைய பிரத்தியேகமான எண்ணங்கள்.சிலவற்றை பார்த்து சிரிப்பு வரலாம்.அழுகை வரலாம் ஏன் கோவம் கூட பலமாக வரலாம். அனைத்து எண்ணங்களையும் விமர்சனங்களையும் நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்பதல்ல இந்த வலை பூவின் நோக்கம்; ஆக குறைந்தது மாற்று கருத்துக்களையும் செவி மடுக்க உங்களை தயார் படுத்தி கொண்டாலே அது ஒரு சந்தோஷமான புரிதல் தான். சரி வரும் நாட்களில் சினிமா, அரசியல், மதம்,தத்துவம், வாழ்க்கை, காதல்,உறவுகள் பற்றி நிறைய பேசுவோம்...தொடர்ந்தும் பகிர்ந்து கொள்வோம்.... |
|---|

