இப்படிக்கு அன்புடன்
My blogs
Location | Chennai, Tamil Nadu, India |
---|---|
Introduction | வணக்கம். எழுத்துகளில் பெரிய ஆர்வம் இருந்தாலும், எழுத வேண்டும் என்று நினைத்தது கிடையாது. அவற்றை படித்து ரசிப்பதோடு நிறுத்தி கொண்டிருந்தேன். என்றோ ஒரு மழை நாளில் திடீர் என்று எழுத்தார்வம் வந்து ஒட்டிக்கொண்டு விட்டது. இந்த வலைப்பதிவின் பெயர் “தனியன்” என்று வைத்ததற்கு பெரிய காரணமோ, பின்குறிப்போ கிடையாது. எழுதுபவர்கள் அனைவரும் புனை பெயர் வைத்திருப்பார்கள். அதுபோல் எனக்கு ஒன்று வேண்டும் என்று மண்டையை உடைத்துகொண்ட போது தோன்றிய பெயர். பெயர் கவர்ச்சியாக இருப்பதாக தோன்றியதால் அதை வலைபதிவிர்கு வைத்துவிட்டு எனக்கு “இப்படிக்கு அன்புடன்” என்ற பெயரை தேர்வு செய்தேன். இதுதான் அப்பட்டமான உண்மை. என் எழுத்துகளில் சுஜாதாவின் சுவடுகள் நிச்சயமாக தென்படும். அதை என்னால் தவிர்க்க முடியாது. அவரின் எழுத்துகளை படித்து படித்து என்னுள் தோன்றுவதும் அவரின் நடை வடிவிலேயே தோன்றுகின்றன. இந்த வலைப்பதிவில் நான் முன்பு (2005-ஆம் வருடம்) நாட்குரிப்பில் எழுதியவற்றை தொகுகிறேன். பிறகு ஏதேனும் புதிதாக எழுத முயற்சிக்கிறேன். இங்கு வந்து படிக்கும் அனைத்து பயணர்களிடமிருந்தும் மறுமொழிகளை எதிர்பார்க்கிறேன். படித்து மகிழுங்கள்… “இப்படிக்கு அன்புடன்” |