நித்திய நிம்மதி
My blogs
| Introduction | சடப்பொருட்களிலே, தங்கமும், வைரமும் சிறந்தனவாக அமைந்திருப்பது போல் உயிரினங்களில் மனித இனம் சிறந்து விளங்குவது ஒரு பிரபஞ்ச உண்மை எனலாம். அந்த மனிதனின் சிறப்புக்கு பல்வேறு காரணிகள் உண்டு. அப்படி சிறப்புற்ற மனிதன், தனது சிறப்பியல்புகளை பயன்படுத்தியே தன்னை இழிவுபடுத்திக்கொள்வதை என்னவென்ருதான் சொல்வது. சடப்பொருட்களிலே தங்கமாகவும், வைரமாகவும் மிளிரும் மனிதன், கேடுகெட்ட சகதியாகவும் சாக்கடையாகவும் தன்னை மாற்றிக்கொள்வதை எவ்வாறு அங்கீகரிக்கலாம். அப்படியொரு கேடுகெட்ட செயலில் அவன் ஈடுபடக் காரணம், தனது உள்ளத்தின் உண்மைத்தன்மையை உணர்வதில் அவன் அசிரத்தை காட்டுவதாகும். அதன்பயனாக அவன் நிம்மதி கெட்டு, அந்த நிம்மதியை பொருத்தமில்லாத வழிகளில், பொருத்தமில்லாத இடங்களில் தேடிப்பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்ற போதே, இப்படியொரு கேடுகெட்ட நிலைக்கு மாறி விடுகிறான் என்று சொல்லலாம். ஆனாலும் எல்லா மனிதர்களும் இப்டிக் கேடுகெட்டவர்களாக ஆவதில்லை அல்லவா... எனவே இருக்கின்ற நல்லவர்களாவது அப்படி கேடுகெட்டுபோகக் கூடாது என முயற்சிப்பவனே இவன் ஆவான். |
|---|

