திப்பு
My blogs
| Introduction | ஒரு மனிதன் எத்தனைதான் மெத்த படித்த மேதாவி ஆனாலும் மொழி பல கற்று பன்மொழி புலவனே ஆனாலும் அவனது எண்ணவோட்டம் தாய்மொழியில்தான் இருக்கும். ஆகவே ஒரு மனிதனை அமுதூட்டி வளர்ப்பது தாய் என்றால் அவனுக்கு அறிவமுது ஊட்டி ஆளாக்குவது தாய்மொழியே. அந்த வகையில் எமக்கு அறிவமுது ஊட்டி ஆளாக்கிய அன்னைத்தமிழ் வழியாக இவ்வலைப்பூ நடத்துவது குறித்து நாம் பெருமகிழ்வு கொள்கிறோம் . அரசியல், சமூகம்,மருத்துவம்,வரலாறு, கல்வி, மொழியியல் என அனைத்து துறைகளிலும் கட்டுரைகள் இத்தளத்தில் வெளியிடப்படும். ஆக்கங்களை பொறுத்தவரை இவ்வலைப்பூ முழுக்க முழுக்க தனித்தமிழ் கொண்டே இயங்கும். ஆங்கில மற்றும் வடமொழிச் சொற்கள் கிஞ்சிற்றும் பயன்படுத்தப் படமாட்டா. எம்மிடம் குறை இருப்பின் எம்மைவிட வயதிலும், அறிவிலும் பெரியோர் , வயதில் சிறியோராயினும் அறிவில் சிறந்தோர் சுட்டிக்காட்டி தட்டிக்கேட்கவும். நிறை இருப்பின் தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கவும் வேண்டுகிறோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற இலக்கை நோக்கி எமது சிறு பங்களிப்பே இவ்வலைப்பூ . தங்கள் வருகைக்கு நன்றி. |
|---|
