ஸ்ரீகாந்தலட்சுமி
My blogs
| Gender | Female |
|---|---|
| Industry | Education |
| Occupation | Librarian |
| Location | இணுவில், யாழ்ப்பாணம், Sri Lanka |
| Introduction | பெரிதாக எதுவுமில்லை. பிறந்தது கிராமியச் சூழலில். தற்போது விரும்புவதும் அதைத் தான். நான் நடந்து வந்த பாதை கற்களும் முட்களும் நிரம்பியது. ஆரம்பத்தில் வலியை ஏற்படுத்திய போதும் வாழ்க்கை பற்றிய எத்தனையோ அனுபவங்களைக் கற்றுக் கொடுத்தது.. அப்பாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட மனங்களை நேசிக்கும் குணம் தான் எனது அத்தனை நகர்வுகளையும் திட்டமிடுகின்றது. போர்வைகளைப் போர்த்திக் கொள்வதில் எனக்கு நாட்டமில்லை. நான் நானாகவே இருக்க விரும்புகின்றேன் இன்றைய உலகில் அது சாத்தியப்படாது என்பது தெரிந்தபோதும்.! எழுத்துக் கூட நான் விரும்பி ஏற்றுக்கொண்டதோ அல்லது நானாகவே திட்டமிட்டதோ அல்ல. ! சூழல் என்னை எழுத நிர்ப்பந்தித்தது என்பது தான் உண்மை. இலக்கிய வடிவங்களுக்குக் கரு தேடுவது எனது நோக்கமில்லை. கருவுக்குப் பொருத்தமான வடிவத்தைத் தேடுவதால் தான் கவிதை, கதை, கட்டுரை, விவரணப்படங்கள் என எனது வடிவங்கள் மாறுகின்றது. அனைத்திலும் தடம் பதிக்க வேண்டும் என்ற எண்ணமும் என்னிடம் இல்லை. இன்றைய நிகழ்வுகள் எதிர்கால சமூகத்துக்குப் போய்ச் சேரவேண்டும் என்ற தாகம் தான் எழுத்தால் பாராட்டுக்களைப் பெறுவதைவிடவும் கூடியவரை நிகழ்வுகளை ஆவணப்படுத்தவேண்டும் என்ற தாகத்தை ஏற்படுத்துகின்றது. |
